மயிலாடுதுறையில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது

by Staff / 23-04-2022 12:31:10pm
மயிலாடுதுறையில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது

மயிலாடுதுறை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோவில் அனுமதியின்றி நாட்டு வெடி தயாரிப்பில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்த போலீசார் சுமார் 50 கிலோ வெடிபொருட்களை பறிமுதல் செய்தனர். சிதம்பரத்தர் என்ற பெயரில் இயக்கி வரும் பட்டாசு விற்பனைக்கு மட்டும் அனுமதி பெற்ற கடையில் ஆய்வு செய்தபோது நாட்டுவெடிகள்  மற்றும் அதனை தயாரிக்க பயன்படுத்தும் கரித்துகள்கள் அமோனியா உள்ளிட்ட மூலப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார் கடை உரிமையாளர் மகேஷ்குமார் ஊழியர்கள் மூன்று பேரையும் கைது செய்தனர்.

 

Tags :

Share via