13 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய கொடூர தாத்தா கைது

by Staff / 03-09-2023 12:44:51pm
13 வயது பேத்தியை கர்ப்பமாக்கிய கொடூர தாத்தா கைது

கேரளாவின் கண்ணூர் அருகே தளிப்பரம்பில், பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய வழக்கில் தாத்தா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். 64 வயதுடைய முதயவர் தனது 13 வயது பேத்தியை பாலியல் பலாத்காரம் செய்து இரண்டு மாதங்கள் கர்ப்பமாக்கினார். வயிற்று வலி காரணமாக சிறுமியை பெற்றோர் மருத்துவமனைக்கு கூட்டிச் சென்றபோது, ​​பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இது பற்றி விசாரித்தபோது தாத்தா பலாத்காரம் செய்ததை சிறுமி கூறியதால் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நீதிமன்றத்தில் குற்றவாளி ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Tags :

Share via