தனியார் மருத்துவமனைகள்  தங்களை முழுமையாக ஒப்படைக்க.வேண்டும்  ஸ்டாலின் வேண்டுகோள்

by Editor / 05-05-2021 06:34:41pm
தனியார் மருத்துவமனைகள்  தங்களை முழுமையாக ஒப்படைக்க.வேண்டும்  ஸ்டாலின் வேண்டுகோள்



திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை, 
கோவிட் -19 பரவலை தடுப்பதற்கான புதிய கட்டுப்பாடுகள்  செயல்பாட்டுக்கு வருகின்றன.
மருத்துவ அவசரநிலை அளவுக்கு #கோவிட்-19 தொற்றின் தீவிரம் இருப்பதால், உடனடியாகக் கட்டளை மையம் ஒன்றை திறந்திட வேண்டும் என தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் ஆக்சிஜன் தேவை, இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு ஆகியவற்றைத்தெரிந்து ஒருங்கிணைந்து செயல்பட இந்த மையம் உதவியாக இருக்கும்.முன்களப்பணியாளர்களின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது.
மருத்துவ அவசர  நிலைக்காலம் என்பதால் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வரும் தனியார் மருத்துவமனைகள் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வேண்டிக்கொள்கிறேன்
கட்டணத்திலும், முடிந்தளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக்கொள்கிறேன். ஏழை எளிய மக்களுக்கு மிகுந்த கருணை காட்டி உயிரை செலவில்லாமல் மீட்டுத்தர வேண்டும்.உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகளும் தம்மை முழுமையாக ஒப்படைக்க வேண்டும்.இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via