மும்பையில் தங்க நகை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9.28 கோடி பணம் 19 கிலோ வெள்ளி பறிமுதல்

by Staff / 23-04-2022 03:49:53pm
மும்பையில் தங்க நகை நிறுவனத்தில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 9.28 கோடி பணம் 19 கிலோ வெள்ளி பறிமுதல்

மும்பையில் தங்கம் வெள்ளி விற்பனை நிறுவனத்தில் சோதனையிட்ட சரக்கு சேவை வரி துறையினர் 19 கிலோ வெள்ளி கட்டிகள் 9 கோடியே 78 லட்சம் ரூபாய் பணக்கட்டுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர் .மும்பையில் ஜாவேரி பஜாரில் உள்ள சாமுண்டா பில்லியன் கம்பெனி வரி இருப்பதாக வந்த குற்றச்சாட்டை அடுத்து சரக்கு சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது சுவரிலும் தரையில் ஓட்டுக்கு அடியிலும் மறைத்து வைத்திருந்த வெள்ளிக்கட்டிகள் பணத்தாள்கள் ஆகியவற்றைக் கண்டறிந்து பறிமுதல் செய்தனர் இதையடுத்து அந்த நிறுவனத்தை மூடி சீல் வைத்துள்ளனர்.  

 

Tags :

Share via