30ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் -சீமான் அறிவிப்பு

by Editor / 25-04-2022 04:15:48pm
30ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் -சீமான் அறிவிப்பு

எரிபொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கடும் விலை உயர்வை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்  சீமான் அறிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு மக்களை வாட்டி வதைக்கும் வகையில் கடுமையாக உயர்ந்து வரும் பெட்ரோல் டீசல் சமையல் எரிவாயு உருளை போன்ற எரிபொருட்களின் விலை சுங்கச்சாவடி கட்டண உயர்வு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய இந்திய ஒன்றிய அரசையும் தமிழக அரசையும் கண்டித்து வருகின்ற ஏப்ரல் 30ஆம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட தலைநகரங்களிலும் நாம் தமிழர் கட்சி சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டும் என சீமான் தெரிவித்துள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு, மாவட்டம் சார்பாக ஏப்ரல் 30ஆம் தேதி சனிக்கிழமை அன்று மாலை 3 மணியளவில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில்தனது தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும் அந்த அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

30ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்பாட்டம் -சீமான் அறிவிப்பு
 

Tags :

Share via