தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஈத்காவிற்கு நிலம் தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்

by Staff / 05-05-2022 12:56:27pm
தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்ற ஈத்காவிற்கு நிலம் தானமாக வழங்கிய இந்து சகோதரிகள்

உத்தரகாண்ட் மாநிலம் உதம் சிங் நகர் மாவட்டம் காஷிபூர் நகரத்தைச் சேர்ந்தவர் பிரஜ்நந்தன் பிரசாத் ரஸ்தோகி. இவரது இரண்டு மகள்கள் சரோஜ் மற்றும் அனிதா. இவர்கள் டெல்லி மற்றும் மீரட்டில் வசித்து வருகின்றனர்.

பிரஜ்நத்தன் கடந்த 2003-ம் ஆண்டில் இறந்துவிட்டார். ஆனால் அவர் உயிருடன் இருக்கும்போது தனது விவசாய நிலத்தில் இரண்டரை ஏக்கரை ஈக்தாவை விரிவாக்கம் செய்ய நன்கொடையாக வழங்க விரும்புவதாக தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

மறைந்த தந்தையின் கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் இந்து மதத்தைச் சேர்ந்த சகோதரிகள் இரண்டு பேர் ஈத்காவிற்கு சுமார் 1.5 கோடி மதிப்புள்ள நிலத்தை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இது இஸ்லாமிய மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதுடன் ரம்ஜான் அன்று மறைந்த அப்பெண்களின் தந்தைக்காக பிரார்த்தனையும் செய்துள்ளனர்.

சகோதரிகள் இருவரும் வகுப்புவாத ஒற்றுமைக்கு ஒரு உயிருள்ள உதாரணம். ஈத்கா கமிட்டி அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறது. சகோதரிகள் இருவரும் அவர்கள் செய்த நற்செயலுக்காக விரைவில் பாராட்டப்படுவார்கள்.

 

Tags :

Share via