ஆய்வாளர் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

by Editor / 05-05-2022 11:16:02pm
 ஆய்வாளர் கஜேந்திரன் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி காவல்நிலைய ஆய்வாளராக பணியாற்றும் ஒருவர்  தூத்துக்குடி மாவட்டத்தில் சார்பு ஆய்வாளர் மற்றும் ஆய்வாளராக பணியாற்றியபோது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி, அவர் மீது பல்வேறு துறை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏர்வாடி காவல் நிலையத்திலும் பொதுமக்கள் கொடுக்கும் மனுக்களுக்கு முறையாக விசாரணை செய்து நடவடிக்கை எடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்த வண்ணம் இருந்து வந்து  உள்ளது. இந்நிலையில் ஏர்வாடியைச் சேர்ந்த பெண் ஒருவர் தென்மண்டல காவல்துறைத்தலைவர் அஸ்ரா கார்க்கிடம் ஆய்வாளர் மீது குறித்து புகார் அளித்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில் காவல் ஆய்வாளர் ராமநாதபுரம் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளதாக்க தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Tags :

Share via