போலி மருத்துவ சிகிச்சை அளித்து கிளினிக் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

by Editor / 10-05-2022 11:40:34pm
போலி மருத்துவ சிகிச்சை அளித்து  கிளினிக் உரிமையாளர் மீது வழக்கு பதிவு

கூடங்குளம் பகுதியில்  உள்ள பொதுமக்களுக்கு  போலியாக மருத்துவ சிகிச்சை அளிப்பதாக போலீசாருக்கு  கிடைத்த இரகசிய தகவலின்பேரில்   காவல் ஆய்வாளர்  தலைமையிலான போலீசார் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர்,  ஜான்பிரிட்டோ  சோதனை மேற்கொண்டதில்  கூடங்குளம் அணுமின் நிலையம் எதிரே  கிளினிக் நடத்திவரும் மஞ்சால்மூடு, செம்மண் விளை வீடை  சேர்ந்த யோவான் என்பவரது மகன் ஞானதாஸ்(62) என்பவர் அரசு அனுமதி பெறாமல் அப்பகுதி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. பின்னர் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் ஜான்பிரிட்டோ அவர்கள் புகார் அளித்ததன் பேரில் கூடன்குளம் காவல் ஆய்வாளர்  ஜான்பிரிட்டோ  மேற்படி‌நபர் மீது வழக்கு பதிவு செய்து கிளினிக்கிள் உள்ள  மருந்துபொருட்களை பறிமுதல் செய்தனர்.மேற்படி வழக்கில் எதிரி ஞானதாஸை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

 

Tags : File a case against the clinic owner for providing fake medical treatment

Share via