திருநெல்வேலி,தென்காசி  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை 

by Editor / 30-04-2024 05:49:06pm
திருநெல்வேலி,தென்காசி  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை 

தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. 
இதனால் ஏப்.30, மே 1 ஆகியதேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், கன்னியாகுமரி, திருநெல்வேலி,தென்காசி உள்ளிட்ட  மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானமழை பெய்யக்கூடும்.

 மே 2-ல்மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். இதர தமிழக மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் திருநெல்வேலி,தென்காசி  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது.இந்தமழையின் தாக்கம் மாஞ்சோலையில்  பகுதிகளிலும் தொடர்கிறது.மேலும் தென்காசி மாவட்டம் குற்றாலம்,குண்டாறு,மேக்கரை ஆகிய பகுதிகளிலும் கனமழை பெய்தது.

 

Tags : திருநெல்வேலி,தென்காசி  மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் மழை 

Share via