தமிழக கேரளா எல்லை ஆரியங்காவில் காரில் போதைப்பொருள் கடத்திய 2  இளைஞர்கள் கைது

by Editor / 10-05-2022 11:53:34pm
தமிழக கேரளா எல்லை ஆரியங்காவில் காரில் போதைப்பொருள் கடத்திய 2  இளைஞர்கள் கைது

தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் அருகிலுள்ள ஆரியங்காவில் போதைப்பொருள் மற்றும் கஞ்சாவுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர்.
தமிழக கேரளா எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை அருகிலுள்ள கேரளமாநிலம் ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் மதுவிலக்கு போலீசார் சோதனையில் ஈடுபட்ட நிலையில் வேகமாக வந்த ஒருகாரை நிறுத்தி நடத்திய சோதனையில் காரில் கொடிய போதைப்பொருள், மற்றும் கஞ்சா வைத்திருந்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர். திருவனந்தபுரம் வல்லக்கடவு சுலைமான் தெருவைச் சேர்ந்த ஷாஜூ (23), அலமீன் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பெங்களூரில் இருந்து தமிழகம் எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை வழியாக சிப்ட் காரில்  திருவனந்தபுரம் சென்ற  காரில் இருந்து 64 கிராம் NDNA போதைப்பொருளும் 90 கிராம் கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன. இது குறித்து தென்மலை காவல்துறை ஆய்வாளர்  அனில்குமார் கூறுகையில், போதைப்பொருள் மற்றும் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அவர்களிடம் மேலதிகாரிகளால் விசாரணைகள்  நடத்தப்பட்டு வருவதாகவும் இன்னும் விசாரணைகள் முடிவடையவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

தமிழக கேரளா எல்லை ஆரியங்காவில் காரில் போதைப்பொருள் கடத்திய 2  இளைஞர்கள் கைது
 

Tags : Two youths arrested for smuggling drugs in a car in Ariyanka on the Tamil Nadu-Kerala border

Share via