வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஓமைக்கிறான்தொற்று
வடகொரியாவில் முதன்முதலாக ஒருவருக்கு ஓமைக்கிறான்தொற்று உறுதியானதால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல் படுத்தப் போடுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது கொரோன பரவல் தொடங்கியதில் இருந்து வட கொரியாவில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கட்டுப்பாடுகள் தொடர்ந்த நிலையில் தற்போதுபியங்கோ நகரில் ஒருவருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனையடுத்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் அனைத்து மாவட்டங்கள் மற்றும் மாநகரங்களிலும் முழு ஊரடங்கு அமல் படுத்த உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அவசர கால மருத்துவ பொருட்களை கையிருப்பில் வைக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.
Tags :