பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

by Editor / 16-05-2022 07:32:38pm
பாலியல் வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அடுத்த சிறு பாலை கிராமத்தை சேர்ந்தவர் 10ம் வகுப்பு படித்து வந்த சிறுமி.  சிறுமியை அவரது உறவுக்காரரான மணி பிரசாந்த் என்பவர் ஆசை வார்த்தை கூறி பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதன் காரணமாக சிறுமிக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.
சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் சிவகங்கை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு குற்றவாளியான மணி பிரசாத்தை கைது செய்து போலீஸார் சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு சிவகங்கை சிறப்பு போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்,குற்றவாளி மணி பிரசாரத்திற்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து போக்ஸோ  நீதிமன்ற நீதிபதி பாபுலால் இன்று உத்தரவிட்டார்.இவருடன் வழக்கில் சேர்க்கப்பட்டிருந்த ஐந்து பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில்,பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

 

Tags : The offender was sentenced to 10 years in prison in a sex case

Share via