கல்குவாரி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்திற்கு 15 லட்சம் நிதி வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவு
நெல்லை அருகே கல்குவாரி ராட்சத பாறை உருண்டு விழுந்த விபத்தில் சிக்கியுள்ள இரண்டு பேரை மீட்கும் பணி மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அடைமிதிப்பான் காலத்தில் நிகழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் மீட்கப்பட்டுள்ளனர் விபத்து நடந்த பகுதியில் சுரங்கத் தொழில் வல்லுனர்கள் மண்ணியல் துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். இதனிடையில் கல்குவாரி குத்தகைகாரர் செல்வராஜ் மற்றும் அவரது மகனுக்கு பிடிக்க தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். மேலும் விபத்தில் பலியான முருகன் செல்வனின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் 10 லட்சம் ரூபாயும் தொழிலாளர் நல வாரியம் சார்பில் 5 லட்ச ரூபாயும் வழங்க முதலமைச்சர் மு க ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
Tags :