போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்த பாஜக நிர்வாகி படுகொலை போலீசார் குவிப்பு.

by Editor / 24-05-2022 11:29:43pm
 போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு இருந்த பாஜக நிர்வாகி படுகொலை போலீசார் குவிப்பு.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். இவர் பாஜக மத்திய சென்னை மாவட்ட எஸ்சி அணித்தலைவராக இருந்துவருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த சிலருக்கும்  முன்விரோதம் இருந்து வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டு உள்ளது. இதனிடையே இன்று இரவு நேரத்தில் சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் வைத்து பாலச்சந்தர் மர்மகும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் தீவிர விசாரணைநடத்தி வருகின்றனர்.முதற்கட்ட விசாரணையில் 6 பேர் கொண்ட கும்பல் பாலச்சந்தரை வெட்டி படுகொலை செய்தது தெரிய வந்துள்ளது.

பாலச்சந்தரை பின் தொடர்ந்து வந்த அந்த மர்ம கும்பல் சாமி நாயக்கன் தெருவில் வைத்து பாலச்சந்தரை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளது. போலீஸ் பாதுகாப்பு இருந்த சூழலில், மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் வைத்து பாலச்சந்தர் கொலை செய்யப்பட்ட சம்பவம்  சிந்தாதிரிபேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அசம்பாவிதங்களை பொருட்டு அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 

Tags : Police concentrate on BJP executive assassination who was given police protection.

Share via