ஓட்டுனரின் கவனக் குறைவால் மின்சார ரயில் விபத்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

by Staff / 27-05-2022 02:09:45pm
ஓட்டுனரின் கவனக் குறைவால் மின்சார ரயில் விபத்து ஓட்டுநர் சஸ்பெண்ட்

சென்னை கடற்கரை ரயில் நிலையத்தில் நடைமேடை மீது மோதி மின்சார ரயில் விபத்துக்கு உள்ளான விவகாரத்தில் மின்சார ரயிலை இயக்கிய ரயில் ஓட்டுநர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார். கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி மாலை பணிமனையில் இருந்து எடுத்துவரப்பட்ட மின்சார ரயில் விபத்துக்குள்ளான நிலையில்பிரேக் பழுதாகி உள்ளதால் விபத்து ஏற்பட்டதாக பவித்திரன் தெரிவித்திருந்தார். இதுகுறித்து விசாரித்த ரயில்வே தொழில்நுட்ப பிரிவு அதிகாரிகள் அடங்கிய விசாரணைக்குழுவின் அறிக்கையில் ஓட்டுனரின் கவனக் குறைவு காரணமாக விபத்து நேர்ந்த தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via