குரங்கு அம்மை சந்தேகம் இருந்தால்மாதிரிகளை புனே ஆய்வகத்திற்கு அனுப்பவும்

by Staff / 01-06-2022 12:49:47pm
குரங்கு அம்மை சந்தேகம் இருந்தால்மாதிரிகளை  புனே ஆய்வகத்திற்கு அனுப்பவும்

குரங்கு அம்மை பரவலை தடுக்க விமான நிலையங்களில் சோதனைகள் அதிகரிக்கப் பட்டுள்ள நிலையில் சந்தேகத்திற்கிடமான பேரின் மாதிரிகளை புனேயில் உள்ள தேசிய தொற்று ஆய்வு மையத்துக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசு மாநில அரசுகளை வலியுறுத்தி உள்ளது. பாதிப்புக்கு ஆளான என சந்தேகிக்கப்படும் நபரை இருபத்தோரு நாட்கள் தினமும் கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது இதற்கான வழிகாட்டல்களை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதுவரை இந்தியாவில் குரங்கு அம்மைத் தொற்று இல்லை என்ற போதும் உலக அளவில் அதிகரித்து வருவதனால் முன்னெச்சரிக்கையாக இந்த வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

 

Tags :

Share via