16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை மருத்துவ குழுவினர் சேலத்தில் ஆய்வு

by Editor / 06-06-2022 05:20:20pm
16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை  மருத்துவ குழுவினர் சேலத்தில் ஆய்வு


16 வயது சிறுமியின் கருமுட்டையை விற்பனை செய்தது தொடர்பான  வழக்கில் ஈரோட்டில் சிறுமியின் தாயார் சுபையா , சுபையாவின் இரண்டாவது கணவர் சையத் அலி, இந்தக் கரு முட்டையை விற்பதற்கு இடைத்தரகராக செயல்பட்ட மாலதி மற்றும் சிறுமியின் வயதை கூடுதலாக ஆவணங்களில் மாற்றிய ஜான் உட்பட 4 நபர்கள்   கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சேலம் புதிய பேருந்து நிலையம் பிருந்தாவனம் சாலையில்  உள்ள பிரபல தனியார் கருத்தரித்தல் மருத்துவமனையில்  மருத்துவர்கள்  கதிரவன், விஸ்வநாதன்,கோமதி,மலர்விழி உள்ளிட்ட 6 பேர் கொண்ட  மருத்துவ குழுவினர் ஆய்வு நடத்தி  வருகின்றனர்.

இந்த சோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமி  கருமுட்டையை வழங்குவதற்காக வந்த பதிவேடுகள், இதுவரை எத்தனை கருத்தரித்தல் செய்யப்பட்டுள்ளது மற்றும் எங்கிருந்து கருமுட்டைகள் பெறப்பட்டுள்ளது போன்ற  மருத்துவ ஆவணங்களை ஆய்வு செய்ய உள்ளனர்.

 

Tags :

Share via