சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (8ம் தேதி)மாலை திறக்கப்படுகிறது
சபரிமலை ஐயப்பன் கோயிலில் பிரதிஷ்டை தின பூஜைகளை முன்னிட்டு கோயில் நடை நாளை (8ம் தேதி)மாலை திறக்கப்படுகிறது. நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. இவ்வருட பிரதிஷ்டை தினம் வரும் 9ம் தேதி அன்று நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். நாளை வேறு சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறாது.
9ம் தேதி அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படும். ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்கள் அனைவருக்கும் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்படும். மீண்டும் ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை வரும் 14ம் தேதி மாலை திறக்கப்படும். 19ம் தேதி வரை கோயில் நடை திறந்திருக்கும்.
Tags : Sabarimala Iyappan Temple opens tomorrow (8th) evening