நகைக்கடை சுவரில் துளையிட்டு 25 கிலோ வெள்ளி 30 பவுன் நகை கொள்ளை.

by Editor / 22-01-2023 10:21:52am
 நகைக்கடை சுவரில் துளையிட்டு  25 கிலோ வெள்ளி 30 பவுன் நகை கொள்ளை.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த அனுமன் தீர்த்தம் பகுதியில் திருப்பத்தூர் சேலம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சேகர் என்பவருக்குசொந்தமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா நகை கடையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் சுவற்றில் துளையிட்டு கடையில் இருந்த 25 கிலோ வெள்ளி மற்றும் 30 பவுன் தங்க நகை கொலை எடுத்துச் சென்றுள்ளனர் தை அமாவாசை தினத்தை ஒட்டி அனுமந்தீர்த்தம்  இடத்தில் ஏராளமான பொதுமக்கள் வந்து சென்ற நிலையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தை அமாவாசை தினத்தைப் ஓட்டி அனைத்து காவலர்களும்  dark night duty இரவு நேர ரோந்து பணியில் இருக்கும் பொழுது நடந்துள்ளதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

 

Tags :

Share via