டிஐஜி தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல்

by Staff / 07-07-2023 12:20:18pm
டிஐஜி தற்கொலை: சிபிஐ விசாரணைக்கு இபிஎஸ் வலியுறுத்தல் கோவை சரக காவல்துறை டிஐஜி விஜயக்குமார் மரணமடைந்த செய்தியறிந்து மிகுந்த மனவேதனை அடைந்தேன், இந்த வழக்கில் சிபிஐ மூலம் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள அவர், 'காலையில் வழக்கமான நடைபயிற்சி முடித்து வந்த விஜயக்குமார் தனது பாதுகாவலரின் கைத்துப்பாக்கியை வாங்கி, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்திகள் வருகின்றன, இது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. ஆகவே விஜயகுமாரின் தற்கொலையை சிபிஐ மூலம் விசாரித்து இதன் உண்மை பின்னணியை அறிய வேண்டும்' என வலியுறுத்தியுள்ளார்.
 

Tags :

Share via