ஆதித்யா எல் 1 - பிரதமர் மோடி வாழ்த்து
சூரியனை ஆய்வு செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட 'ஆதித்யா எல்1' செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. விண்கலத்தை சுமந்து சென்ற பிஎஸ்எல்வி-சி57 ராக்கெட்டில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்தது. விண்கலம் குறிப்பிட்ட சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். இந்நிலையில், ஆதித்யா எல்1 விண்கலத்தை வெற்றிகரமாக ஏவிய விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதன்படி, “சந்திரயான் வெற்றியை தொடர்ந்து இந்தியா தனது விண்வெளி பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒட்டுமொத்த மனித குலத்தின் நன்மைக்காக பிரபஞ்சத்தை பற்றிய சரியான புரிதலுக்காக, விஞ்ஞான முயற்சிகள் தொடரும்” என தெரிவித்துள்ளார்.
Tags :