பறவையை காப்பாற்ற முயன்று இருவர் உயிரிழப்பு

by Editor / 11-06-2022 02:57:42pm
பறவையை காப்பாற்ற முயன்று இருவர் உயிரிழப்பு

மும்பையைச் சேர்ந்தவர் அமர் மணீஷ் ஜரிவாலா. இவர் கடந்த மாதம் 30ம் தேதி காரில் பாந்தரா - வொர்லி கடல் இணைப்பு மேம்பாலம் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரது காருக்கு அடியில் கழுகு ஒன்று சிக்கியுள்ளது. இதைக் கவனித்த கார் ஓட்டுநர் ஷியாம் சுந்தர் காரை நிறுத்தி மணீஷ் ஜரிவாலாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து இருவரும் காரை விட்டு கீழே இறங்கி கழுகை மீட்டக முயன்றனர்.

அப்போது அந்த வழியில் வேகமாக வந்த மற்றொரு கார் இருவர் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டுள்ளனர். இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்த போலிஸார் பார்த்தபோது மணீஷ் ஜரிவாலா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தெரிந்தது.

 

Tags :

Share via