பலாப்பழம் மற்றும் குளிர்பானம் காம்பினேஷன் தொடரும் பலாப்பழ உயிரிழப்பு மர்மம்

by Editor / 22-06-2022 02:22:51pm
பலாப்பழம் மற்றும் குளிர்பானம் காம்பினேஷன் தொடரும் பலாப்பழ உயிரிழப்பு மர்மம்

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே பலாப்பழம் மற்றும் குளிர் பானம் அருந்திய சிறுவன் உயிரிழந்த நிலையில் நேற்று அவரது தாயாருக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் என்பவருக்கு பரணி என்ற மனைவியும் இனியா என்ற மகள் மற்றும் பரணிதரன் என்ற மகனும் உள்ளனர். கடந்த 3 தினங்களுக்கு முன்பு தாய் பரணி மற்றும் அவரது மகன் மகள் ஆகிய மூவரும் வீட்டில் உணவு அருந்தி விட்டு உடனே பலாபழம் சாப்பிட்டு குளிர்பானம் குடித்ததாக கூறப்படுகிறது. இதனால் சிறிது நேரத்தில் மூன்று பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டதையடுத்து சிகிச்சைக்காக சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். சிகிச்சை  பலனின்றி சிறுவன் பரணிதரன் உயிரிழந்தான். இந்த சம்பவம் குறித்து வேல்முருகன் அளித்த புகாரின் பேரில் மருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் மகனின் உடல் அடக்கத்துக்கு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த தாயே உறவினர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். தொடர்ந்து மீண்டும் தாய்க்கு உடல் நல குறைவு ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மகல்  இனியாவும்  மேல் சிகிச்சைக்காக இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் தாய் பரணி மருத்துவமனையில் உயிரிழந்தார். மேலும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதற்கு இடையே சிறுவன் பரணியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தங்கள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியும் என மருதூர் போலீசார் தெரிவித்துள்ளனர். சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவமனையின் தலைமை மருத்துவர் கூறுகையில் பலாப்பழம் தொடர்ந்து குளிர்பானம் சாப்பிடுவதால் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும் சிறுவனின் பிரேத பரிசோதனை மற்றும் மருதூர் போலீசாரின் விசாரணையில் உண்மை நிலை தெரியவரும் என்றும் தெரிவித்தார். இதர் இடையில் குடும்ப பிரச்சனை காரணமாக ஹோல்டிங்ஸ் எலி பேஸ்ட் கலந்து மகன் மகளுக்கு கொடுத்ததாக உறவினர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது ஆகையால் போலீசாரின் தீவிர புலன் விசாரணைக்கு பின்னரே பலாப்பழத்தின் பின்னணி குறித்த விவரங்கள் தெரியவரும்.

 

Tags :

Share via