மதுபோதையில் நண்பனை அடித்துக்கொலை செய்த டிரைவர் உள்பட 3 பேர் கைது
தூத்துக்குடி அருகே திருமணம் செய்த இரண்டு மனைவிகளும் பிரிந்து சென்றதை கூறி கேலி செய்த நண்பனை மதுபோதையில் அடித்து கொலை செய்த டிரைவர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் மாநகரை சேர்ந்த மகேஸ்வரனும் செல்வகுமாரின் லாரி டிரைவராக பணியாற்றி வந்தனர் கடந்த 19ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இருவரும் லாரியில் மீன் லோடு ஏற்றி சென்ற போது மதுபோதையில் இருந்த மகேஸ்வரன் மனைவியை பிரிந்து வாழும் செல்வகுமார் பற்றி அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. கடந்த 23ஆம் தேதி மகேஷ் அவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில் விசாரணை மேற்கொண்ட போலீசார் செல்வகுமாரின் அவரது நண்பர்கள் இருவரையும் கைது செய்தனர் தலைமறைவான இருவரையும் தேடி வருகின்றனர்.
Tags :