பள்ளி,கல்லூரிகளில் விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கும் சி.பி.எஸ்.இ.மாணவர்கள்
தமிழக அரசின் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் தமிழ்நாட்டில் இயங்கக்கூடிய தமிழக அரசு பள்ளி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் தேர்வு முடிவுகள் மட்டுமே வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் செயல்படக்கூடிய தமிழக அரசின் கீழ் இயங்கும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,மற்றும் தனியார்களில் மாணவர்களை சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வருகிற ஜூலை 7ஆம் தேதி கடைசி தினம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தின் செயல்படக்கூடிய சுமார் 500க்கும் மேற்பட்ட சிபிஎஸ்இ பள்ளியில் 10 மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவர்களின் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியாகாத நிலையில் அரசு,தனியார் பள்ளிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் விண்ணப்பிக்க முடியாத நிலையில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கால அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் அல்லது தமிழகத்தில் சிபிஎஸ்இ பள்ளிகளின் தேர்வு முடிவுகளும் ஒரேநாளில் வெளியிடப்பட வேண்டும்.என்ற கோரிக்கை வலுத்துள்ளது
Tags : CBSE students who are unable to apply in schools and colleges