விஷப்பூச்சி கடித்து 8 ஆம் வகுப்பு மாணவன் பலி
மதுரை கொட்டாம்பட்டி அருகே பூமங்கலப்பட்டியை சேர்ந்த சிறுவன் நிதிஷ். கொட்டாம்பட்டியிலுள்ள தனியார் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படித்து வருகின்றான். கடந்த 22 ஆம் தேதி பள்ளியில் இருந்த போது விஷப்பூச்சி கடித்துள்ளது. இதனையடுத்து சிறுவன் நிதிஷ் மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.. பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையே சிறுவன் உயிரிழப்புக்கு காரணம் என உறவினர்கள் குற்றச்சாட்டு..
Tags :