பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழா 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

by Editor / 10-05-2024 12:22:17am
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழா 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலயத் திருவிழா மிகவும் புகழ்பெற்ற விழா. இந்த விழாவிற்கு தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வருவது வழக்கம். இந்தப் புகழ்பெற்ற ஆலயத்தின்
68வது திருவிழா இன்று முதல் 10,11, 12 ஆகிய மூன்று நாட்கள் நடைபெற உள்ளது.  இந்த விழா அமைதியாக நடைபெறவும் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாமல் இருக்கும் வகையில் 9 ஆம் தேதி மாலை முதல் வரும் 12ஆம் தேதி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விழா இன்று தொடங்க உள்ளதால் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூரில்   தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் புதியம்புத்தூர் கனி திருமண மண்டபத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது  அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக திருவிழா நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பாதுகாத்திட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.இதனை தொடர்ந்து பாஞ்சாலங்குறிச்சி ஓட்டப்பிடாரம் புதியம்புத்தூர் குறுக்குச்சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பாதுகாப்பு பணியில் 5 ஏடிஎஸ்பி, 13 டிஎஸ்பி, 48 இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

Tags : பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய விழா 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு.

Share via