அமித்ஷா பங்கேற்ற விழாவில் 13 பேர் பலி

by Staff / 17-04-2023 12:31:39pm
அமித்ஷா பங்கேற்ற விழாவில் 13 பேர் பலி

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் மாநில அரசு சார்பில் 'மகாராஷ்டிரா பூஷண் விருது' வழங்கும் விழா நடந்தது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திறந்தவெளி மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியை காண லட்சக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அப்போது வெயிலின் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு மாநில அரசு ரூ. 5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்துள்ளது.

 

Tags :

Share via