காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை துன்புறுத்தல் புகார்கள் உள்ளது

by Editor / 03-07-2022 07:34:07pm
காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை துன்புறுத்தல் புகார்கள் உள்ளது

 மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள தியாகராஜர் கலைக்கல்லூரியில் குரலற்றவர்களின் குரல் என்ற அமைப்பின் சார்பில் கருத்தரங்கு நிகழ்ச்சி நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, "காவல்துறை தொடங்கப்பட்டதில் இருந்தே காவல்துறை துன்புறுத்தல் புகார்கள் உள்ளது. 1902-ம் ஆண்டில் இருந்தே காவல்துறையினர் துன்புறுத்தியதாக புகார் வந்தது. கடந்த 10 ஆண்டுகளில் 80 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. 2018-ம் ஆண்டு 18 காவல்நிலைய மரணங்கள் நிகழ்ந்துள்ளன. இதுவே அதிகபட்சமாகும். 2021-ல் 4 பேர், 2022-ல் 2 காவல் நிலைய மரணங்கள் மட்டுமே நடைபெற்று உள்ளன. காவல் நிலையங்களில் மரணங்கள் நிகழக்கூடாது என்று முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனை நடைமுறைப்படுத்தும் வகையில் காவல்துறையினர் செயல்பட வேண்டும்" என்று அவர் இந்த கருத்தரங்கில் தெரிவித்தார்.

 

Tags : There have been complaints of police harassment since the inception of the police force

Share via