பெரும்விபத்திலிருந்து உயிர் தப்பினார் எம்.எல்.ஏ!

by Editor / 31-05-2021 07:48:11am
பெரும்விபத்திலிருந்து உயிர் தப்பினார் எம்.எல்.ஏ!

ஆண்டிபட்டி திமுக எம்எல்ஏ மகாராஜன் நேற்று திண்டுக்கல் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தாா். அவரது காருக்கு முன்னதாக தேனியைச் சோந்த பன்னீா்செல்வம் என்பவரின் காா் சென்றது. இந்த இருகார்களுக்கும் முன்னதாக வாழைத்தாா்கள் ஏற்றிய சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது. அந்த வாகனத்தை அருப்புக்கோட்டையைச் சோந்த மாரிமுத்து ஒட்டிச் சென்றாா்.

தேனி-திண்டுக்கல் சாலையில் 3 வாகனங்களும் சென்றுகொண்டிருந்தன. கணவாய்ப்பட்டி பிரிவு என்னுமிடத்தில் திடீரென்று சரக்கு வாகனம் வத்தலகுண்டு சாலையில் திரும்பியதால் பன்னீா்செல்வம் ஒட்டி வந்த காா், சரக்கு வாகனத்தின் பின்புறம் மோதியது.

இதையடுத்து அடுத்து வந்த திமுக எம்எல்ஏ மஹாராஜனின் காா், பன்னீா்செல்வம் காரில் மோதியது. இந்த விபத்தில் சரக்கு வாகனத்தில் வந்த விவசாயத் தொழிலாளா்கள் 6 பேர் காயமடைந்தனர். உடனடியாக திமுக எம்எல்ஏ மகாராஜன் உள்ளிட்டோர் அவர்களை மீட்டு வத்தலக்குண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பிவைத்தனர்.மேலும் இந்த விபத்தில் 2 காா்களும் சேதமடைந்தன. பின்னர் மற்றொரு காரை வரவழைத்து அதில் எம்எல்ஏ மகாராஜன் புறப்பட்டுச் சென்றார்.

 

Tags :

Share via