கட்டுப்பாட்டை இழந்து மின்மாற்றியில் மோதிய பேருந்து தீக்கிரையாகி விபத்து
கடலூர் அருகே தனியார் பேருந்து மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் உயிரிழந்த நிலையில் விபத்துக்குள்ளான பேருந்து தீக்கிரையானது. விருத்தாச்சலத்தில் 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற பேருந்து குள்ளஞ்சாவடி அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென சாலையின் அருகே இருசக்கர வாகனம் வந்த நிலையில் அதனைஇடித்துச் சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த மின்மாற்றி மீது மோதியது. இதனை அடுத்து தீப்பற்ற தொடங்கியபோது அதில் இருந்த பயணிகள் உடனடியாக வெளியேறினர். தீ மளமளவென பரவிய நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை கட்டுப்படுத்தினர். பேருந்து மோதியதில் விபத்துக்குள்ளான இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் படுகாயமடைந்து உயிரிழந்தனர்.
Tags :