முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்

by Writer / 08-07-2022 07:24:35pm
முன்னாள்  ஜப்பானிய  பிரதமர் ஷின்சோ அபே சுட்டுக் கொல்லப்பட்டார்

முன்னாள்  ஜப்பானிய  பிரதமர் ஷின்சோ அபே,  நீண்ட காலம் பதவியில் பணியாற்றியவா். , வெள்ளிக்கிழமை  பிரச்சாத்தின் போது  சுட்டுக்  கொல்லப்பட்டார்.  சம்பவத்தின்   இடத்தில் சந்தேகத்திற்குரிய  துப்பாக்கி  வைத்திருந்த  ஒருவனை  போலீசார்  கைது செய்தனர்.67 வயதான அபே, 2006 மற்றும்  2007ல்   பிரதமராக பதவி வகித்தார், மீண்டும்   2012 முதல்  2020 வரை  பதவி வகித்த அவர்,  உடல்நலக் குறைவால்  பதவி விலகினார். பதவியை  விட்டு வெளியேறிய  போதிலும், அவர் ஆளும் கட்சிக்குள்  செல்வாக்கு  பெற்றவராக  இருந்தார்   ஜப்பானின் அரசியல் பொருளாதார சக்தியாக இருந்தார். தென்மேற்கில்  உள்ள  நாரா  நகரில்,  நாடாளுமன்றத்   தேர்தலுக்கான பிரச்சாரத்தில்  ஈடுபட்டிருந்த போது அவர்,  வீட்டில் தயாரிக்கப்பட்ட  துப்பாக்கியால்  சுட்டுக் கொல்லப்பட்டார் .

 

 

Tags :

Share via