மோசடி ஆவணங்களை ரத்து செய்யும் அதிகாரத்தை பதிவுத் துறைக்கு வழங்கும்சட்டத் திருத்தம்

by Admin / 23-08-2022 11:13:17am
மோசடி ஆவணங்களை  ரத்து செய்யும்  அதிகாரத்தை  பதிவுத் துறைக்கு வழங்கும்சட்டத் திருத்தம்

தலைமைச்செயலகத்தில் ,பத்திரப்பதிவு துறையில் கடந்த காலங்களில் மோசடியாக பதியப்பட்ட ஆவணங்களை பத்திரப் பதிவு  துறையே ரத்து செய்ய அதிகாரம்  அளிக்கும் பதிவுச் சட்ட திருத்த மசோதா  கடந்த ஆண்டு  தமிழ்நாடு  சட்டமன்றப் பேரவையில்  நிறைவேற்றப்பட்டு,  தற்போது மாண்புமிகு இந்திய குடியரசுத் தலைவர் அவர்களின் ஒப்புதலை பெற்றுள்ளது. இச்சட்டத்திருத்தம் இந்தியாவின் பிற  மாநிலங்களுக்கு ஒரு முன்னோடியாக உள்ளது. மோசடி ஆவணங்களை  ரத்து செய்யும்  அதிகாரத்தை  பதிவுத் துறைக்கு  வழங்கும்  வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வழிகாட்டியமைக்காக  முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை  அமைச்சர் பி.மூா்த்திசந்தித்து நன்றி தெரிவித்து  வாழ்த்துப் பெற்றார்.

 

Tags :

Share via