ஆன்லைனில் ரூ.53 லட்சம் இழப்பு - இளைஞர் தற்கொலை
தேனி மாவட்டம் போடியில் அருகே ஜெராக்ஸ் கடை வைத்து நடத்தி வந்தவர் தனவந்தன் (26). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் நடந்துள்ளது. தனவந்தன், ஆன்லைன் வர்த்தகத்தில் முதலீடு செய்து வந்த நிலையில் சுமார் ரூ.53 லட்சம் வரை இழந்துள்ளார். இதற்காக கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணம் கேட்டு வந்துள்ளனர். இதனால், மனமுடைந்த தனவந்தன் நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :