மகாராஷ்டிராவில் பலத்த மழைக்கு 76 பேர் பலி..
மகாராஷ்டிராவில் கடந்த ஒரு வாரமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. மேலும் கொங்கன் உள்ளிட்ட பகுதிகளில் வருகிற 13-ந் தேதி வரை மழை பெய்யும் என எச்சரித்து உள்ளது. இந்தநிலையில் மகாராஷ்டிராவில் கடந்த மாதம் முதல் மழைக்கு 76 பேர் பலியானது தொியவந்து உள்ளது. இதில் கடந்த சனிக்கிழமை மட்டும் 9 பேர் பலியானார்கள். இதில் வார்தா மாவட்டத்தில் 4 பேர், கட்சிரோலியில் 3 பேர், நான்தெட், சிந்துதுர்க்கில் தலா ஒருவர் உயிரிழந்தார். இதேபோல 125 கால்நடைகள் உயிரிழந்து உள்ளன.
Tags : 76 people died due to heavy rains in Maharashtra..