மேக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை

by Editor / 11-07-2022 05:14:43pm
மேக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா மேக்கரை பகுதியில் உள்ள அடவிநயினார் கோயில் நீர்த்தேக்கம் செல்லும் வழியில் முகமது கனி என்பவரது மகன் காசிர்அலி (வயது 25) என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்த நிலையில், காசிர்அலி தம்பதியினர் நேற்று பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய நிலையில், காசீர் அலிக்கும், அவரது மனைவி அசன் பீவி (வயது 19) என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில், அசன் பீவி அவரது தந்தை ரகுமதுல்லா வீட்டிற்கு சென்றுள்ளார்.

இந்த நிலையில், நேற்று இரவு காசீர் அலியும், அவரது வீட்டின் எதிரே உள்ள ஒரு அறையில் காசீர் அலியின் பாட்டி சைத்தான் பீவியும் தூங்கி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், காசீர் அலியின் மனைவியும், அவரது மாமனாரும் இன்று காலை 11 மணியளவில் காசீர்அலியின் வீட்டிற்கு வந்துள்ளனர். அப்போது, காசீர் அலி ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது உறவினர்கள் சம்பவம் குறித்து அச்சன்புதூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், காசீர் அலியின் பாட்டியை எங்கே என்பது குறித்து விசாரணை நடத்திய போது, காசீர்அலியின் பாட்டி சைத்தான் பீவி(வயது 70) நிர்வாணமான நிலையில் படுகொலை செய்யப்பட்டு காசீர்அலியின் வீட்டிற்கு பின்னால் உள்ள ஒரு குடிலில் கிடந்துள்ளார். அதே இடத்தில் ஒரு சேவல்படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடந்துள்ளது.

இது குறித்து தகவலறிந்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தடவியியல் நிபுனர்கள் தற்போது மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 மேக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

மேக்கரை பகுதியில் நடைபெற்ற இந்த இரட்டை கொலை
 

Tags :

Share via