நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும்
கள்ளக்குறிச்சியில் தனியார் மெட்ரிக் பள்ளியின் மீது தாக்குதல் நடைபெற்ற நிலையில், அதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக நாளை முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக், சிபிஎஸ்சி பள்ளிகள் இயங்காது என்று தனியார் பள்ளிகள் சங்கத்தின் தலைவர் நந்தகுமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் விதிகளை மீறி விடுமுறை விட்டால் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை என மெட்ரிகுலேஷன் இயக்குநரகம் தெரிவித்துள்ளது. இதனால் நாளை பள்ளிகள் வழக்கம்போல் இயங்குமா? இயங்காதா? என மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் ஏற்பட்ட குழப்பம் நீடித்தது காரணமாக நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது. வழக்கம்போல் இயங்கும்,நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை விடுவது தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tags :