இந்தியா சீனா இடையே 16 வது சுற்று பேச்சுவார்த்தை எல்லையில் படைகளைக் குவித்து சீனா பின் வாங்க மறுப்பு

by Editor / 18-07-2022 02:30:41pm
இந்தியா சீனா இடையே 16 வது சுற்று பேச்சுவார்த்தை எல்லையில் படைகளைக் குவித்து சீனா பின் வாங்க மறுப்பு

இந்திய சீன ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான 16வது சுற்றுப் பேச்சுவார்த்தை நேற்று சுமார் 12 மணி நேரம் நீடித்தது.கிழக்கு லடாக் எல்லை பகுதியில் குறிப்பிட்ட சில மாதங்களில் சீனா படைகளை குவித்து உள்ளதற்கு இந்தியா தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்க பட்டுள்ளது.சீனா சாலைகள் பாலங்கள் குறித்தும் இந்திய தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இரண்டு முக்கிய இடங்களில் இருந்து சீனா படைகளை விலக்கிக் கொள்ளவும் மூன்றாவது முக்கிய பகுதியில் இந்தியா தனது ரோந்து செய்யும் உரிமையை மீட்கவும் சீனாவுடன் பேச்சு நடத்தி உள்ளது. எல்லைப் பகுதியில் பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் ஜெட் விமானங்களை பறக்க விடக்கூடாது என்றும் சீனாவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

 

Tags :

Share via