.அதிமுக அலுவலகத்தின் சாவியை எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிபதி உத்தரவு
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக இபிஎஸ் ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகலில் தீர்ப்பளித்தது .அதிமுக அலுவலகத்தின் சாவியை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடிபழனிசாமியிடம் ஒப்படைக்க நீதிபதி சதீஷ் குமார் உத்தரவு கடந்த 11ஆம் தேதி அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த கலவரத்தை தொடர்ந்து அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. நீதிமன்ற தீர்ப்பை அடுத்து, சென்னை பசுமை வழி சாலை யில் உள்ள இபிஎஸ் இல்லத்தில் அதிமுக தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
Tags :