போலந்தில் வீசிய புயலால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதம் ஒருவர் உயிரிழந்த நிலையில் 409 பேர் பத்திரமாக மீட்பு

by Editor / 24-07-2022 05:25:30pm
போலந்தில்  வீசிய புயலால் குடியிருப்பு கட்டிடங்கள் சேதம் ஒருவர் உயிரிழந்த நிலையில் 409 பேர் பத்திரமாக மீட்பு

போலந்தில் வீசிய புயல் காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததால் வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் சேதம் அடைந்து உள்ளன. அந்நாட்டிற்கு தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கடும் புயல் உடன் கனமழை கொட்டித் தீர்த்த நிலையில் குடியிருப்பு கட்டிடங்கள் சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. புயலில் சிக்கி ஒருவர் உயிரிழந்ததாகவும் 409 பேர் மீட்கப்பட்டதாகவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via