பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம்

by Admin / 06-05-2024 01:32:00pm
பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம்

 கடலையூர் சேகரம் தூய பவுலின் சி.எஸ்.ஐ. ஆலயம் மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து கடலையூரில் பொது மக்களுக்கான இலவச கண் சிகிச்சை மற்றும் பரிசோதனை முகாம் நடத்தினர். 

தூத்துக்குடி மாவட்டம் , கடலையூர் கிராமத்தில் சி.எஸ்.ஐ. தூய பவுலின் ஆலயம் மற்றும் கோவில்பட்டி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினர். முகாமினை கடலையூர் சேகர குரு, அருட்திரு. சிமியோன் பிரபு டேனியல் துவக்கி வைத்தார். முகாமில் கிட்டப் பார்வை, தூரப் பார்வை, வெள்ளெழுத்து, கண்புரை குறைபாடு, உள்ள நோயாளிகளுக்கு இலவச சிகிச்சை வழங்கப்பட்டது. மேலும் கண்புரை குறைபாடு உள்ள நோயாளிகளை முகாம் தினத்தன் ரே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு உள் விழி லென்ஸ், அறுவை சிகிச்சை, மருந்து, தங்கும் வசதி, உணவு, மற்றும் போக்குவரத்து உள்ளிட்டவைகளை இலவசமாக வழங்கி அறுவை சிகிச்சை மேற்கொண்டனர். தொடர்ந்து ஒரு மாதம் கழித்து மறுபரிசோதனையையும் இலவசமாக மேற்கொள்ள உள்ளனர். தொடர்ந்து கிட்டப்பார்வை, தூரப்பார்வை, வெள்ளெழுத்து, உள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை முகாமிலேயே கண் கண்ணாடிகளை வழங்கினர். முகாமில் கடலையூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிகிச்சை பெற்று பயனடைந்தனர்.

 

Tags :

Share via