சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

by Staff / 30-11-2022 12:58:18pm
சிறுமி பலாத்காரம்: குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பேரிங்கோம் காவல் நிலையத்திற்குட்பட்ட நெடுமன்னாவில் என்.கே.முரளிதரன் (56) என்பவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தளிபரம்பு போக்சோ விரைவு நீதிமன்ற நீதிபதி சி.முஜீப் ரஹ்மான் தீர்ப்பளித்தார். முரளிதரன் அப்பகுதியைச் சேர்ந்த சிறுமியை 13 வயது சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். ஒருமுறை அவர் சிறுமியின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து கொடூரமாக நடந்துகொண்டார். இந்த வழக்கில் அவருக்கு ரூ.80,000 அபராதமும், 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது.மிரட்டியதற்காக 2 பிரிவுகளின் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.20000 அபராதமும் மற்ற வகை சித்திரவதைகளுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ.10000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. 2014 ஆகஸ்ட் 11ம் தேதி கண்ணூர் மகளிர் பிரிவுக்கு வந்த புகாரின் பேரில் சிறுமியின் வாக்குமூலத்தை பெற்று போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.

 

Tags :

Share via