மகள் காதலனுடன் சென்றதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை

by Staff / 22-01-2024 03:34:19pm
மகள் காதலனுடன் சென்றதால் தந்தை விஷம் குடித்து தற்கொலை

சேலம் அம்மாபேட்டை கிருஷ்ணா நகர் 6-வது கிராஸ் பகுதியை சேர்ந்தவர் அழகேசன் (வயது 52). இவர் சேலம் மாநகராட்சி மன்னார்பாளையம் அலுவலகத்தில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவரது மகள் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் மகள் உறவினர் ஒருவரை காதலித்து அவருடன் சென்று விட்டதால் மனமுடைந்த அழகேசன் விஷத்தை குடித்து விட்டார். இதனை அறிந்த குடும்பத்தினர் அழகேசன் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அழகேசன் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டைபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

 

Tags :

Share via