மாணவ,மாணவியர்கள் அறிவுக்கூர்மை, உடல் உறுதியும், மன தைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

by Editor / 26-07-2022 04:07:57pm
மாணவ,மாணவியர்கள்  அறிவுக்கூர்மை, உடல் உறுதியும், மன தைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டும் முதலமைச்சர் மு க ஸ்டாலின்

சென்னை குருநானக் கல்லூரி பொன் விழாவில் கலந்துகொண்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவ,மாணவியரிடம் மனம்விட்டுப் பேசுங்கள், மாணவர்களுக்கு உங்களுடைய பிரச்சினைகளையும், நோக்கங்களையும், கனவுகளையும் பெற்றோரிடம் ஆசிரியரிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள், தமிழ்நாட்டு மாணவ,மாணவியர்கள் அறிவுக்கூர்மை கொண்டவர்களாக மட்டுமல்ல உடல் உறுதியும், மன தைரியமும் கொண்டவர்களாக வளர வேண்டுமென தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசினார், மேலும் கல்விக்கூடங்கள் வருமான நோக்கத்தோடு நடத்தக்கூடாது. எனவும் சமீப காலமாக நடந்த சில நிகழ்வுகள்  தன்னை மனவேதனையடைய  செய்ததாகவும் உயிரை மாய்த்துக்கொள்ளும் சிந்தனைகளைக் கைவிட்டு உயிர்ப்பிக்கும் சிந்தனைகளை மேற்கொள்ள வேண்டும்  எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

 

Tags :

Share via