தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 4.500 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல்
போதை மாத்திரைகள் தயாரிப்பதற்காக தூத்துக்குடியில் இருந்து கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற வலி நிவாரண மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கடற்கரையில் சோதனை மேற்கொண்ட போலீசார் அங்கு பதிவு எண் இல்லாத படகை ஆய்வு செய்த போது சுமார் 430 அட்டைகளில் 4500 வலி நிவாரண மாத்திரைகள் இருந்தது தெரியவந்தது. மருத்துவர்கள் பரிந்துரை இல்லாமல் இந்த மாத்திரைகளைப் பயன்படுத்தக் கூடாது என்பதுடன் மாத்திரைகளை வாங்குவதற்கான ரசீதும் இல்லாததால் அவற்றை பறிமுதல் செய்தனர்.
Tags :