பாளையங்கோட்டை மத்திய சிறை தலைமை காவலர் பணியிடை நீக்கம்
தமிழ்நாட்டில் உள்ள பெரிய சிறைச்சாலைகளில் பாயைங்கோட்டை மத்தியச்சிறைச்சாலையம் ஓன்று. இங்கு ராதாபுரம் அருகே உள்ள மதகநேரியை சேர்ந்த டேவிட் (வயது 46) என்பவருக்கு குற்ற வழக்கில் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி பாளையங்கோட்டை சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது. அவரும் சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த 27-ம் தேதி டேவிட் பாளையங்கோட்டை மத்திய சிறை அங்காடியில் இருந்து தப்பி ஓடிவிட்டார். இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை. இதையடுத்து, கவனகுறைவாக பணியாற்றியதாக சிறையின் தலைமை காவலர் கந்தசாமியை பணியிடை நீக்கம் செய்து பாளையங்கோட்டை மத்திய சிறை கண்காணிப்பாளர் சங்கர் உத்தரவிட்டுள்ளார்.தப்பி ஓடிய சிறை கைதி டேவிட் கடந்த 2018 ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதி முதல் தண்டனை கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் இருந்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags : Palayamgottai Central Jail Head Constable post removed