திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம்-முதலமைச்சர் ஸ்டாலின்
ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு:
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்ததற்கு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள்தான் காரணம்.தனியார் பள்ளிகளை நிர்வகிக்க தனியாக மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமிக்கப்படுவார்கள்.தற்காலிக ஆசிரியர்கள் 60 வயது வரை பணி செய்ய அனுமதிக்கப்படுவார்கள்-ஜாக்டோ ஜியோ மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு.அக்டோபர் 15ம் தேதி முதல் அரசு ஊழியர்களுக்கான பணிமாறுதல் கலந்தாய்வு, ஆன்லைன் மூலமாக வெளிப்படையாக நடக்கும்.அரசு கருவூலத்தில் பல்லாயிரம் கோடிக்கு பணம் சேர்க்க வேண்டுமென்பது எங்கள் இலக்கு அல்ல நான் நினைக்கும் திட்டங்களை நிறைவேற்ற தேவையான பணம் இருந்தால்போதும் என்று நினைக்கிறோம்.நீங்கள் தனி தீவு கிடையாது, நானும் உங்களில் ஒருவன்; நீங்கள் அரசு ஊழியர், நான் மக்கள் ஊழியன்.அரசு ஊழியர்கள் கடந்த அதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்டார்கள்.இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்டுள்ள ஆட்சி.அரசு ஊழியர்களின் நம்பிக்கைக்கு எப்போதும் பாத்திரமாக இருப்பேன் என இந்த மாநாட்டில் முதல்வர் உரையாற்றினார்.
Tags :