நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு

by Editor / 30-07-2022 02:25:05pm
நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 14 பேர் மீது வழக்குப்பதிவு


நீலகிரி மாவட்டத்தில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் சுமார் 83 இடங்களில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில் கந்து வட்டிக்கு பணம் கொடுத்து வந்த 14 பேர் மீது வழக்கு பதியப்பட்டு அவர்களது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களிடமிருந்து 5 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ரொக்கம் 18 காசோலை மற்றும் 11 பத்திரங்கள் கைப்பற்றப்பட்டன. மேலும் கந்து வட்டி வசூல் செய்ய பயன்படுத்தப்பட்ட இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

 

Tags :

Share via