சடக்குன்னு தரையில் அமர்ந்த ஆட்சியரால் அதிர்ந்துபோன அதிகாரிகள்
திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமையில் நடைபெற்றது.அப்போது அவர் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டிருந்தார் அப்போது அங்கு மனுகொடுக்க வந்து வரிசையில் காத்திருந்த விவசாயி ஒருவர் திடீரென ஆட்சியரின் காலில் விழுந்தார். இதை சற்று எதிர்பார்க்காத ஆட்சியர் உடனே தானும் தரையில் அமர்ந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு அந்த விவசாயியை அழைத்து காலில் விழக்கூடாது எனவும், இதுபோன்ற செயல்களை செய்யக்கூடாது எனவும், தரையில் 5 நிமிடங்கள் உட்கார்ந்து அவரிடம் விசாரித்தார். அப்போது அங்கு இருந்த அதிகாரிகள் மாவட்ட ஆட்சியர் திடீரென தரையில் அமர்ந்ததால் என்னசெய்வது என்று தெரியாமல் தவித்தனர்.அவர்களது தவிப்பை கண்ட ஆட்சியர் பின்னர் சுதாரித்துக்கொண்டு எழுந்து தனது பணிகளை தொடர்ந்தார்.
Tags : The officials were shocked by the ruler sitting on the ground