முருகன் கோவிலில் காதுகுத்து விழாவில் திடீரென பெண் மீது விழுந்த சீலிங் ஃபேன்

by Editor / 04-08-2022 04:46:58pm
முருகன் கோவிலில் காதுகுத்து விழாவில்  திடீரென பெண் மீது விழுந்த சீலிங் ஃபேன்

முருகன் கோவிலில் காது குத்தும் நிகழ்ச்சிக்கு வந்த பெண் மீது மின்விசிறி கழண்ட் விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. சென்னை ஆவடியை சேர்ந்த லட்சுமி என்ற பெண் திருத்தனி மண்டபத்தில் உறவினர் குழந்தைக்கு காது குத்து விழாவிற்கு சென்று இருந்தார். அப்போது மண்டபத்தில் பொருத்தப்பட்டிருந்த சீலிங் ஃபேன் எதிர்பாராதவிதமாக லட்சுமி மீது விழுந்ததில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவருக்கு மலைக்கோவிலில் முதலுதவி அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

Tags :

Share via